Monday 19 January 2015

காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி

ஆந்திராவில் காங்கிரஸ் மூத்த  தலைவரும் ஆந்திர முன்னாள் அமைச்சரான வெங்கடராவ் உடல் நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது (75) நெஞ்சு வலி காரணமாக ஹைதராபாத்தில் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

அப்போது சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த தகவலை ஆந்திர மாநில காங்கிரஸ் செயலாளர் கே.சிவாஜி தெரிவித்தார்.

வெங்கடராவ், கிருஷ்ணா மாவட்டம் கோகுலம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். ராவ் கல்லூரியில் படிக்கும் போது இருந்தே  காங்கிரஸ்சில் தன்னை இணைத்து கொண்டு பணீயாற்றி வந்தார்.

அவர் நுவாசித்தில் சட்ட மன்ற தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கபட்டார். ஆந்திர மாநிலதில் இரண்டு தடவை அமைச்சராக பணியாற்றி உள்ளார்.

அவரது இறுதி சடங்கு கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நுவாசித்தில் நடைபெற உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது மறைவுற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆந்திர முதல்-மந்திரியும், ஆந்திர மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான ஜெகன்மோகன் ரெட்டியும் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive