ஆவடி
திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலை வ.உ.சி நகரில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 36). திருமுல்லைவாயலில் கேபிள் டி.வி ஆபரேட்டராக வேலை செய்தார். இவர் நேற்று முன்தினம் மாலை ஆவடி ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி ரெயில் தண்டவாளத்தை கடந்து சென்றார்.
அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆவடி அடுத்த இந்துக் கல்லூரி ரெயில் நிலையம் அருகே நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது மின்சார ரெயில் மோதி உயிரிழந்தார். இறந்தவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் லுங்கியும் நீல நிற சட்டையும் அணிந்திருந்தார்.
2 சம்பவங்கள் குறித்தும் ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
0 comments:
Post a Comment