Monday 19 January 2015

குடியரசு தினத்தை முன்னிட்டு கொச்சி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளதாக கொச்சி விமான நிலைய இயக்குநர் ஏ.சி.கே நாயர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 31-தேதி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கபடுவார்கள்.பயணிகளின் உறவினர்கள்,நண்பர்கள்,விமான நிலையத்தின் உள்ளே அனுமதிகபட மாட்டார்கள்.

விமானத்தின் பயணிகளின் உடைமைகள் லக்கேஜ்கள், தீவிர பரிசோதனைக்கு பின்னரே  விமான நிலையத்திற்கு உள்ளே அனுமதிக்கபடுவார்கள்.

பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் விமான நிலைய போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுகொண்டார்.

விமான நிலையத்தில் பார்க்கிங் போன்ற இடங்களிலும் போலீசார் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு ஏ.சி.கே நாயர் கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive