Wednesday 21 January 2015

டெல்லி மக்கள் எனக்கு அதிக வெற்றியை கொடுப்பார்கள் வேட்பு மனுதாக்கல் செய்த பிறகு கிரண்பேடி பேட்டி



புதுடெல்லி

டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7–ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டிதேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.டெல்லியில் பா.ஜ.க. காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

இன்று  ஆம் ஆத்மி கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் மக்கான்  டெல்லி சதார் பஜார் தொகுதியில் போட்டியிடுகிறார் அவரும் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் முதல்-ம்ந்திரி வேட்பாளரும் முன்னாள் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கிரண்பேடி கிருஷ்ணா நகர் தொகுதியில்  போட்டி யிடுகிறார் கிரண் பேடி இன்று  திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று கட்சி தொண்டர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் கிரண்பேடி கூறியதாவது:

டெல்லி மக்கள் எனக்கு அதிக வெற்றியை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஒவ்வொரு நாளும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டு அறிந்து அதை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். டெல்லி முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் குறைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்வேன்.

இவ்வாறு பா.ஜ.க.முதல்-மந்திரி வேட்பாளர் கிரண்பேடி கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive