Tuesday 20 January 2015

ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக தடை விதிக்கப்பட்ட விலங்குகளில் காளையை நீக்க நடவடிக்கை மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி,
டெல்லி பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் மீதான தடையை விலக்குவதற்காக மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு வழிவகை செய்யும் நோக்கில் தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்குவதற்கு சட்டரீதியான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யவும் ஆலோசனைகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive