Sunday 18 January 2015

ஆந்திராவில் முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு பாதயாத்திரை

ஐதராபாத், 
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்–மந்திரியுமான சந்திரபாபுநாயுடு நேற்று 18 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார். மேற்கு கோதாவரி மாவட்டம் வெலிவேணு கிராமத்தில் தனது பாதயாத்திரையை தொடங்கிய அவர், அங்குள்ள என்.டி.ராமாராவ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில மந்திரிகளும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். பாதயாத்திரையின்போது, சேட்டிபேட்டை, தல்லாபலம், சிங்கவாரா கிராமங்களுக்கு சென்ற சந்திரபாபுநாயுடு, கோவேரு தொகுதிக்கு உட்பட்ட பிரமணா கூடம் கிராமத்தில் தனது யாத்திரையை நிறைவு செய்கிறார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive