Wednesday 21 January 2015

நடிகரும், எழுத்தாளருமான சோ, சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக சளிப்பிடித்து இருந்தது. அதன் காரணமாக நேற்று இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் அவர் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். காலையிலும் மூச்சுத்திணறல் குறையவில்லை. எனவே அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தினார்கள். அவருக்கு உரிய சிகிச்சைகள் அளித்து கண்காணித்து வருகிறார்கள்.



லக்னோ,

உத்தரபிரதேச மாநில முன்னாள் டி.ஜி.பி. பிரிஜ்லால் இன்று பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

போலீஸ் பணியில் இருந்தபோது குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய பிரிஜ்லால், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இணைந்து பணியாற்ற விரும்பி இன்று கட்சியில் தன்னை இணைத்துக்கொள்வதாக
அம்மாநில பா.ஜ.க.தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் அகிலேஷ்யாத்வ் 2012-ம் ஆண்டு முதல்-மந்திரியாக பதவியேற்ற பிறகு 1977-ம் ஆண்டை சேர்ந்த பிரிஜ்லால் அப்பதவியில் இருந்து நீக்கபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மாயாவதிக்கு நெருக்கமாக இருந்த காரணத்தால் அவரை டி.ஜி.பி.பதவியில் இருந்து அம்மாநில அரசு நீக்கியது.

மற்றொரு ஐ.பி.எஸ்.அதிகாரியான கியான் சிங்கும் முன்னாள் எம்.எல்.ஏவும் மான ராஜேந்திர சிங் பா.ஜ.க.கட்சியில் இணைந்தது அதன் ஒற்றுமையை காட்டுகிறது என்று ஓம் மாத்தூர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive