Wednesday 21 January 2015

எழுத்தாளர் சோ ஆஸ்பத்திரியில் அனுமதி தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் கண்காணிப்பு




நடிகரும், எழுத்தாளருமான சோ, சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக சளிப்பிடித்து இருந்தது. அதன் காரணமாக நேற்று  இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் அவர் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

 காலையிலும் மூச்சுத்திணறல் குறையவில்லை. எனவே அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தினார்கள். அவருக்கு உரிய சிகிச்சைகள் அளித்து கண்காணித்து வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive