Wednesday 21 January 2015

போதுமான மேட்ச் வின்னர்கள் இருப்பதால் இந்தியாவால் உலக கோப்பையை தக்க வைக்க முடியும்: ராகுல் டிராவிட் நம்பிக்கை



புதுடெல்லி,

இந்திய அணியில் பலமேட்ச் வின்னர்கள் இருப்பதால் கோப்பையை தக்க வைக்க இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகுல் டிராவிட் கூறுகையில், இந்திய அணியில் தேவையான அளவுக்கு மேட்ச் வின்னர்கள் இருப்பதால் உலக கோப்பையை வெல்ல நமக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். உலக கோப்பையில் உள்ள தற்போத வடிவத்தின் படி, முண்ணனி அணிகள் எளிதாக காலிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.  

ஆனால் அதற்கு பின் நாக் அவுட் சுற்றில் வெறும் மூன்று போட்டிகளே உள்ளது.  மூன்று போட்டிகளையும் வெல்லும் வகையில் நமது அணியில் மேட்ச்வின்னர்களை பெற்றிருக்கிறோம் . விராட் கோலி மற்றும் தோனி ஆகியோர் பெரிய அளவில் ரன்களை குவித்தால் எதுவும் சாத்தியம்” என்று தெரிவித்தார்.

மேலும், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய முண்ணனி நான்கு அணிகளுக்கு உலக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive