புதுடெல்லி,
ஒரு தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதி, அடுத்த தேர்தலில் போட்டியிடுகிறபோது அவரது சொத்து மதிப்பு அதிகரிப்பதைத் தான் பார்த்து வந்திருக்கிறோம். இதற்கு டெல்லி சட்டசபை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிற ஆம் ஆத்மி கட்சித்தலைவர் கெஜ்ரிவால் விதிவிலக்கு.
கெஜ்ரிவால் பெயரில் ரூ.92 லட்சத்துக்கு நிலம், பிற முதலீடுகள் உள்ளன. அவரது மனைவி பெயரில் ரூ.41 லட்சம் கடன் உள்ளது.பாராளுமன்ற தேர்தலின்போது கெஜ்ரிவால் மீது 8 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இப்போது அந்த வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 2013–ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டசபை தேர்தலின்போது கெஜ்ரிவால் தாக்கல் செய்த அபிடவிட்டுக்கும், இப்போது நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு தாக்கல் செய்துள்ள அபிடவிட்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஏதும் இல்லை என தகவல்கள் கூறுகின்றன.
0 comments:
Post a Comment