Wednesday 21 January 2015

ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசியவாத இயக்கம்: டெல்லி முதல் மந்திரி வேட்பாளர் கிரண்பேடி

புதுடெல்லி,

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு தேசியவாத இயக்கம்  என்றும் அது நாட்டை ஒற்றுமையாக வைத்துள்ளதாகவும்  கிரண் பேடி கூறியுள்ளார். 

அண்மையில் பாரதீய ஜனதாவில் இணைந்த கிரண் பேடியை  டெல்லி முதல் மந்திரி வேட்பாளாரக பாரதீய ஜனதா அறிவித்தது. டெல்லி கிருஷ்னா நகர் தொகுதியில் போட்டியிடும் அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், கிரண் பேடி இன்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அவர்கள்( ஆர்.எஸ்.எஸ்) ஒரு தேசியவாதிகள். இந்தியா ஒருங்கிணைத்து அந்த அமைப்புதான் வைத்துள்ளது என்று நான் கருதுகிறேன். ஆர்.எஸ்.எஸ்.இந்தியாவை சுத்தமாக வைத்துள்ளது. மிகுந்த ஒழுக்கமான நபர்களாகவும் மிகச்சிறந்த தேசியவாதியாகவும் அவர்கள் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இளைஞர்களுக்கு ஒழுக்கத்த்தை அவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்” என்று தெரிவித்தார். 

மேலும், தனது பேட்டியின் போது கிரண் பேடி அரவிந்த் கெஜ்ரிவலை கடுமையாக விமர்சித்து பேசினார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive