Tuesday 20 January 2015

சசி தரூரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படலாம்: டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ் பாஸ்சி தகவல்

புதுடெல்லி.

சுனந்தா புஷ்கரின் மர்மான மரணம் தொடர்பாக அவரது கணவரிடம் டெல்லி போலீசார் நேற்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் சசி தரூரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பிஎஸ் பாஸ்சி தெரிவித்துள்ளார்.மேலும் முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர், நேற்றைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் இந்த வழக்கில் உண்மையை கண்டறிய ஐபில் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் நாங்கள் விசாரணையை மேற்கொள்வோம் என்றார். 

நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்ற நேற்றைய விசாரணை பற்றி  டெல்லி கமிஷனரிடம் கேட்ட போது,  சம்பவம் நடைபெற்ற அன்று என்ன நடைபெற்றது என்று சசிதரூரிடம்  நங்கள் விசாரித்தாம். சிலவற்றை நாங்கள் ஊடகங்களில் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தார். இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன அவரிடம் கேட்டபோது, சசி தரூர் விசாரணையின் போது எங்களிடம் என்ன தெரிவித்தார் என்பது குறித்து ஆராய்ந்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும் என்றார். 

சசி தரூரிடம் மீண்டும் விசாரிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பபட்ட போது, முழுமையான விசாரணை நடத்திய பின்னர்  மீண்டும்  விசாரிப்பது குறித்து முடிவு எடுப்போம் என்றார்.சசி தரூர் இந்த வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சியாக எடுத்துக்கொள்ளப்படுவரா என்று கேள்வி எழுப்பிய போது, இது ஒரு முடிவில்லாத கேள்வி என்று கூறிய அவர், இந்த வழக்கை பொறுத்தவரை தற்போது வரை  எந்த ஒரு நபர் மீதும்  சந்தேகம் எழவில்லை என்றார். காங்கிரஸ் எம்.பி சசி தரூர் இன்னும் சில தினங்களில்  மீண்டும் விசாரிக்கப்படலாம் என்று டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive