தருமபுரி, ஜன. 20-
தருமபுரி அருகே இன்று பிற்பகலில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள். மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தருமபுரியிலிருந்து அஞ்செட்டி சென்ற அரசுப்பேருந்து ஒகேனக்கல் அருகே மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 300 அடி கிடு கிடு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது இனிமேல் தான் தெரியவரும்.
தருமபுரி அருகே இன்று பிற்பகலில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள். மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தருமபுரியிலிருந்து அஞ்செட்டி சென்ற அரசுப்பேருந்து ஒகேனக்கல் அருகே மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 300 அடி கிடு கிடு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது இனிமேல் தான் தெரியவரும்.
0 comments:
Post a Comment