Sunday 18 January 2015

இரு பிரிவினருக்கு இடையே மோதல் 3 பேர் உயிருடன் எரிப்பு: பீகார் முசாபர்பூரில் கொடூரம்

முசாப்பர்பூர்,

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் என்ற இடத்தில்  இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர்  உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டனர். இதானால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாட்னாவில் இருந்து 55 கிமீட்டர் தொலைவில் உள்ள முஸ்லீம் மதத்தவர்கள் அதிகம் வசிக்கும் ஆசிஸ்பூர் என்ற கிராமத்தில்  முஸ்லீம் பெண் ஒருவரை அருகாமையில் உள்ள கிராமத்த்தை சேர்ந்த 19 வயது இந்து  இளைஞர் காதலித்து வந்தார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். 

இந்த நிலையில், நேற்று இளைஞர் உடல் மட்டும் மர்மான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞரின் கிராமத்தினர் அந்த பெண்ணின் கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற பலமணிநேரம் ஆகியும் அங்கு  காவல்துறையினரோ அதிகாரிகளோ யாரும் வரவில்லை. இதனால் கிராமத்தினர் பலர் இன்று தப்பி ஓடிவிட்டனர். 

”அங்கு நிலமை மிகவும் பதட்டமாக உள்ளது இருப்பினும் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது” என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் உயர் அதிகாரிகளும் பெருமளவில் போலீஸ் படைகளும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.  கலவரத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive