Sunday 18 January 2015

வீடு புகுந்து மடிகணினியை திருடிய ஆசாமியை விரட்டிப்பிடித்த சகோதரிகள்

போபால், 
மத்திய பிரதேச மாநிலம் ஷாபுரா நகரை சேர்ந்த சகோதரிகள் திவ்யா திவேதி (வயது 28), ஷிவ்யா (21) ஆகியோர் நேற்று முன்தினம் தங்கள் வீட்டில் உள்ள ஒரு அறையில் அமர்ந்திருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த ஒரு திருடன், திடீரென்று அந்த அறையில் இருந்த மடிகணினியை திருடிக்கொண்டு தப்பி ஓடினான்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த ஷிவ்யா, உடனடியாக அந்த திருடனை துரத்த ஆரம்பித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திவ்யாவும் சேர்ந்து விரட்டினார். சாலையில் சகோதரிகள் இருவரும் அலறியபடி ஓடி ஆசாமியை பிடித்தனர். அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்களும் திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவனது பெயர் சஞ்சய்தாகூர் என்பதும் அவன் ஏற்கனவே அதே வீட்டில் கடந்த 7–ந்தேதி அன்று புகுந்து பொருட்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது.
அந்த மாநில உள்துறை மந்திரி பாபுலால் கவுர், அந்த வீட்டுக்கு நேரில் சென்று, திருடனை துணிச்சலுடன் விரட்டிப்பிடித்த சகோதரிகளை பாராட்டினார். அவர்களுக்கு அரசின் சார்பில் வீர விருது வழங்கப்படும் என்றும் மந்திரி அறிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive