Sunday 18 January 2015

பிரதமர் அலுவலகம் பெயரில் போலி வலைத்தளம் கொல்கத்தாவில் ஒருவர் கைது

புதுடெல்லி, 
பிரதமர் அலுவலகம் சார்பில் நடத்தப்படுவதாக கூறி ‘பிரதான் மந்திரி ஆதர்ஷ் யோஜனா’ என்ற பெயரில் ஒரு போலி வலைத்தளம் அமைத்து அதனை செயல்படுத்தி வந்த சுதீப்தா சட்டர்ஜி (வயது 43) என்பவரை கொல்கத்தாவில் டெல்லி போலீசார் கைது செய்தனர்.
அந்த வலைத்தளம் மூலம் அரசிடம் இருந்து கடன் பெற்றுத்தருவதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து போலீசார் 20 செல்போன்கள், ‘ஹார்டு டிஸ்க்’, 43 வங்கி கணக்குகளின் காசோலை புத்தகம் மற்றும் 16 அரசு அலுவலக முத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
இவர் ஏற்கனவே இதேபோல் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive