Sunday 18 January 2015

பலதடவை டெலிபோன் செய்தும் ‘அன்னா ஹசாரேவுடன் பேச முடியவில்லை’ கிரண் பேடி சொல்கிறார்

புதுடெல்லி, 
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் செயல்பட்டு வந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடி, சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தார். இதனால், அன்னா ஹசாரே அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுபற்றி கேட்டபோது கிரண் பேடி கூறியதாவது:–
அன்னா ஹசாரேவுக்கு நான் பலதடவை டெலிபோன் செய்தேன். சிலமுறை அவர் தூங்கிக்கொண்டிருந்தார். சிலமுறை ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அதனால் பேச முடியவில்லை. நாளையும் (இன்று) நான் டெலிபோன் செய்வேன்.
அன்னா ஹசாரே என்ன சொல்வார் என்று எனக்குத்தெரியும். அவர் புன்னகை புரிவார்.
இவ்வாறு கிரண் பேடி கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive