![](http://img.dailythanthi.com/Images/Article/201501200325143846_Kerala-state-award-to-Bharatanatyam-artist-Padma_SECVPF.gif)
பரதநாட்டிய கலைக்கு ஆற்றிய சேவைக்காக பிரபல பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்துக்கு கேரள அரசின் சுற்றுலா துறை ‘நிஷாகாந்தி புரஸ்காரம்’ விருது வழங்கி கவுரவித்து இருக்கிறது. இந்த விருது ரூ.1½ லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டு பத்திரமும் கொண்டது ஆகும்.
திருவனந்தபுரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் விழாவில் பத்மா சுப்பிரமணியத்துக்கு விருது வழங்கப்பட இருப்பதாக கேரள சுற்றுலா துறை செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.
0 comments:
Post a Comment