Wednesday 21 January 2015

விஷம் குடித்து பெண் தற்கொலை

அரியலூர் அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் கலியபெருமாள். இவரது மனைவி முனியம்மாள்(வயது 28). இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் சேமித்து வைத்துள்ள பருத்தியை விற்று வாருங்கள் செலவுக்கு பணம் வேண்டும் என்று தனது கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு, தற்போது விற்கமுடியாது, சில நாள் ஆகட்டும் என்று கலியபெருமாள் கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த முனியம்மாள் பருத்தி செடிகளுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முனியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive